Saturday, November 13, 2010

நிலவு தூங்கும் நேரம்

நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது

இது ஒரு தொடர் கதை
தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம்

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ .. நீ இனி நான் வாழ்வோம் வா கண்ணா

[நிலவு தூங்கும் ....]

கீதை போல காதல் மிக புனிதமானது
பேதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் .....ஏன் தயக்கம் கண்ணா வா இங்கே ...

[நிலவு தூங்கும் ....]

No comments:

Post a Comment